Saturday, November 17, 2012

பாலை : தமிழர்களை போர்க்குணமிக்க படையாக மாற்றுவதற்கு கிடைத்த ஆயுதம்

ஊடகங்களிலும் நட்சத்திர ஆதிக்கம் இருந்த கோலிவூட்டில் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள்தான் அதிகம் வெளிவருகின்றன. ஆனால் இதையும் மீறி சில வித்தியாசமான படங்கள் வெளிவருகின்றன. இவை வந்ததும் தெரியாமல் உள்ளது.





அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள படங்களில் ஒன்றான ''பாலை'' மீது கவனத்தை செலுத்துவோம்.








''பாலை'' படத்தின் கதை முல்லை நிலத்தில் இருக்கும் இரண்டு குடிகளுக்குமிடையிலான போர் பற்றியது. இது அரசர்களின் கதையல்ல. மாறாக சாதாரண மக்களின் கதை. அந்தவகையில் இத்திரைப்படம் சாதாரண மக்களின் வாழ்க்கையை, வரலாற்றைப் பேச விளைகின்றது.


தமிழ்த் திரைப்படச் சூழலில் இந்தப் போக்கு புதிது. நாம் ஒவ்வொருவரும் ஆதரவு கொடுக்கவேண்டிய திரைப்படமாகும். கலைத்துவ அம்சங்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழின விரோதப்போக்கைக் கடைப்பிடிப்பது அயோக்கியத்தனம். சமகால வரலாற்றில் இது வேண்டத்தகாத செயலாகும்.


சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லும் முறையால் வித்தியாசமான களத்தில் பயணம் செய்துள்ள இயக்குநர் செந்தமிழன், இந்தப் போக்கு தமிழ்த் திரைப்பட உலகிற்கு புதிது.


கடவுள், சாதி, மதம் கடந்து உண்மையான தொன்மை வரலாற்றை தமிழர் இன்னும் பதிவுசெய்யவில்லை. அந்தவகையில் தொல் குடிகளின் தொன்மையான வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே பாலை எனும் திரைப்படம்.


நம் தமிழ்ச் சமூகத்தில் பெருமிதங்களையும் மரபுகளையும் கூறி தமிழ் மக்களை அடிமை மனநிலையில் இருந்து விடுவித்து போர்க்குணமிக்க படையாக மாற்றுவதற்கு கிடைத்த ஆயுதமாக பாலை திரைப்படம் அமைந்துள்ளது.


பருவப் பிள்ளைகளிடையே மூளும் காதல் அவர்களது கூடல் அதை அறிந்து அவர்களது இணைப்பை சமூகம் அங்கீகரிக்கும் திருமணக் கொண்டாட்டம், கூட்டு மனநிலைக் கடத்தல் போன்ற விடயங்கள் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள்.

இவை ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல. பல்பரிமாணமிக்க உயிர்ப்பான சமூகத்தின் எளிமையான அடையாளங்களும் கூட.


இப்படி நடைமுறை வாழ்க்கையில் எளிமை மாத்திரமின்றி அண்டைக் குழுக்களுடன் நேர்மையாகவும் இருக்க முயற்சிக்கிறார்கள் முல்லைக்குடிமக்கள். ஆனால் இதற்கு நேர் எதிராக அந்த நேர்மையை தமக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு வஞ்சகம் செய்கிறது ஆயக்குடி சமூகம். இந்த இரு சமூகங்களுக்கிடையிலும் போர் மூளுகிறது. இங்கு குடிகளுக்கான போர் என்பதிலும் கூட மிகைப்படுத்தல்கள் எட்டிப்பார்க்கவில்லை.


யானைகளை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கவன்கள் முறை உட்பட அந்தக் காலத்தில் பல்வேறு போர் முறைகள் நமக்கு ஆச்சரியம் தருகின்றன. போரில் வெற்றிபெறுவதற்கு எவையெல்லாம் தேவையென்று முல்லைக்குடியைச் சேர்ந்த முதுவன் சுட்டிக்காட்டுவது யாவும் சத்தியவார்த்தைகள்.


 ''முல்லைக் குடிக்கு அடிமைகள் தேவையில்லை. முல்லைக் குடி யாருக்கும் அடிமை இல்லை'' போன்ற வார்த்தைகள் நமது கவனத்துக்குரியது.


ஆண்களுக்கு நிகராக போருக்குத் தாயாராகும் வீரத் தமிழ்ப்பெண்களையும் தம் இனக்குழுவிற்கு ஆபத்து நேரும் போது வில்லெடுத்து களத்திற்கு வந்துநிற்கும் சங்ககால சிறுவர் கூட்டத்தையும் பாலை அடையாளம் கட்டுகிறது.


ஆரம்பத்தில் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் மரபை தமிழினம் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையையும் எடுத்துக்காட்டுகிறது.





இதைவிட பார்ப்பணியத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட பழம் தமிழ்க் குடியாக இருளர் சமூகப் பெண்கள் பலரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இவை இதுவரையில் தமிழ்த்திரைத் துறையில் இடம்பெறவில்லை.


போர் என்றால் எதிரியைத் தாக்குவதல்ல, எதிரியை வீழ்த்துவதென முல்லைக்குடி முதுவன் கூறும் போதும், ''தலைவர் எங்கே.... தலைவர் எங்கே...'' எனத் தேடாதே; எதிரியை, ''எங்கே... எங்கே எதிரி'' என எதிரியை தேடுங்கள் என்று பொருள்படும்படி முல்லைக்குடித் தலைவர் விருந்திரன் தனது வீரர்களுக்கு போர்க்களத்தில் கூறும்போது இந்த வார்த்தைகள் நமது சமகாலத் தமிழர் அரசியலில் வாசிப்பாகவும் கட்சியாகவும் நீட்சி பெறுவது தவிர்க்க முடியாது. 


அவ்வப்போதும் பாலை முதுவன் உதிர்க்கும் வசனங்கள் அனைத்தும் மனதில் இடம்பிடிப்பவையாக உள்ளன.


முதுவன் தனது மகன் இறந்த கதையை யதார்த்தமாகக் கூறும்போது நெஞ்சில் பாலையின் கொடூரத்தை உணரவைக்கிறார். கதைப்படி அவர் கூறுகின்ற பாலை என்ற வாழ்விடப்பரப்பு தற்போது சோமாலியாவில் நிகழ்ந்துவரும் வரலாறுகாணாத பெரும் பஞ்சத்தைப் போன்றது என உணர முடிகிறது.


உடன்போக்கு, ஆநிரைக் கவர்தல், திருமணமுறை, யானைகளை விரட்ட கவன்கள் எரிதல் புகை மூலம் பேசும் முறை என சங்ககால வாழ்வியல் பதிவுகள் படமெங்கும் சிதறிக்கிடக்கின்றன.


போர் முடிந்த பிறகு தலைவர் குளக்கரையில் மயங்கி கிடப்பது போன்றும் அதன் பிறகு தலைவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்ற செய்தியோடு படம் முடிகிறது. தலைவன் மரித்தாலும் விடுதலைப் போராட்டம் தொடருமென்கிற வரலாற்று உண்மையை பாலை இயக்குநர் செந்தமிழர் நுணுக்கமாக பதிவு செய்கிறார்.

  
நிலமும் பெண்டலும் தனியுடைமையாகாத அந்தக் காலகட்டத்தில் தலைவனும் தலைவியும் கல்லுண்டு கலவி கொள்ளும் காட்சி அழகிய வெளிப்பாடு சார்ந்தது.


நகரமயமாக்கல், உலகமயமாக்கல் முதலானவற்றின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கும் இன்றைய காலத்தில் பாலை, காலத்தின் தேவையாகவும் காட்சியின் கருத்துமாக பரிணமித்துள்ளது. நாம் அதிகம் மிகைப்படுத்தல் நிரம்பிய படங்களையே பார்த்துப் பழகிவிட்டோம். இந்தப் பார்வைக் கோலங்களை பாலை திரைப்படம் மாற்றியமைக்க விளைகிறது.





இப்படத்தில், நடிகர்-நடிகைகளின் நடிப்பு, ஆடை ஒப்பனைகள், அலங்காரமென எதிலும் மிகையில்லை. இந்தப் படம் உண்மை சார்ந்த முன்னகர்வு, வரலாற்றுணர்வின் மீட்டுருவாக்கம். புராணப் படலங்களையும் சில வரலாற்றுப் படங்களையும் பார்த்த எமக்கு இந்தப் படம் புதிய அனுபவமாக அமைகிறது.


இன்றைய படத்தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பணம் படைத்த அரசியல்வதிகள் தமிழர் பண்பாடு என்ற பெயரில் சினிமா சந்தையில் ஏகபோக வணிகம் செய்துவருகிறார்கள். இந்தப் பின்னணியில் பாலை திரைப்படத்திற்கான உழைப்பு பாராட்டத்தக்கது.


மாற்றுத் திரைப்பட முயற்சிகளில் ஈடுபடுபவருக்கு கருத்தியல் தெளிவும் படைப்பாக்க உந்துதலும் சமூகவரலாற்று உணர்வும் முக்கியம் என்பதை பாலை படமாகவும் முன்வைக்கிறது.


நான் படித்தவற்றில் பிடித்தது.





நன்றி.

Saturday, November 3, 2012

கர்ப்ப காலத்தில் chips வேண்டாம்

கர்ப்ப காலத்தில் Acrylamide அதிகம் அடங்கிய உணவுகளை உற்கொள்வதனால் குறைந்த எடையுடைய குழந்தைகள் பிறக்கும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.





கர்ப்ப காலத்தில் chips மற்றும் crisps போன்ற உணவு வகைகளை உற்கொள்வதானது, குறைந்த எடையுடைய குழந்தைகள் பிறக்கும் ஆபத்தை அதிகரிப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பார்சிலோனியாவில் உள்ள Centre for Research in Environmental Epidemiology (CREAL) அமைப்பினால் இந்த சர்வதேச ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கர்ப்ப காலத்தில்  Acrylamide இணை அதிகமாக உட்கொண்ட பெண்களுக்கு குறைந்த எடையுடையதும் சிறிய தலைச் சுற்றளவை கொண்டதுமான குழந்தைகள் பிறந்தமை கண்டறியப்பட்டது.






பொறித்தல் மற்றும் வறுத்தல் போன்ற முறைகளில் அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் (crisps, chips or crackers) அதிக காபோவைதரேட் உருவாக்கப்படுவதனால் Acrylamide என்ற ஒரு இரசாயனம் காணப்படுகின்றது. இது கர்ப்பத்திலுள்ள குழந்தைகளின் சுகாதார ஆற்றலை பாதிக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

2006 தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் டென்மார்க், இங்கிலாந்து, கிரீஸ், நோர்வே மற்றும் ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் உள்ள 1100 கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்களை CREAL ஆராய்ச்சியாளர்கள் அவதானித்தனர்.

பெண்களிடம் உணவு மற்றும் புகைத்தல் உள்ளிட்ட ஏனைய பழக்கவழக்கங்களை பற்றியும் ஆராய்ந்தனர்.

கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் Acrylamide அளவு வெளிப்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் வழங்கினர்.

அதில், Acrylamide மட்டத்தினை பொறுத்து விளைவின் தாக்கமும் வேறுபட்டிருந்தது. குழந்தையின் ஆகக் குறைந்த எடையாக 132 கிராம்களாகவும் தலையின் சுற்றளவு 0.33 cm களாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

உயர்ந்த மட்ட Acrylamide, இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகளிலும் குறைந்த மட்ட Acrylamide, டென்மார்க்கில் பிறந்த குழந்தைகளிலும் காணப்பட்டது.

Acrylamide இன் பாதிப்பானது புகைத்தலினால் ஏற்படுகின்ற பாதிப்பை ஒத்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






மேலும், குழந்தைகளின் எடை குறைவதானது இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுடன் தொடர்புபடுவதாகவும் குழந்தைகளின் தலை சுற்றளவு குறைவாக இருப்பது நரம்பு வளர்ச்சியை பாதிக்கும் எனவும் ஆய்வின் சார்பில் கூறப்பட்டுள்ளது.



நன்றி.

Saturday, October 20, 2012

2050 இல் 100 வயதில் 30 இலட்சம் பேர்


உலகில் வயோதிபர்களின் தொகை அதிகரித்து வருவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு இருக்கும் அறிக்கையொன்றில் 2050 ஆம் ஆண்டளவில் உலகில் சிறுவர்களை விடக் கூடுதலான எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் இருப்பார்கள் என்று வியப்பைத்தரும் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.







21 ஆம் நூற்றாண்டில் உலகில் முதுமைப்படுதல்; ஒரு கொண்டாட்டமும் ஒரு சவாலும் என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் இன்று உலகில் நூறு வயதை அடைந்த மூன்று இலட்சத்து பதினாறாயிரம் பேர் இருப்பதாகவும் இத்தகையவர்களின் தொகை 2050 ஆம் ஆண்டளவில் பத்து மடங்காகி சுமார் 30 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.









வயோதிபர்களினால் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிட்டுகின்றன.

ஆனால் வயோதிபர்களின் தொகை அதிகரித்து வருவது என்பது சுகாதார பராமரிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற விவகாரங்களில் நாடுகளுக்கு பாரதூரமான சவால்களைத் தோற்றுவிக்கும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.

உலக சனத்தொகை முதுமை அடைதல் என்ற பிரச்சினை உலகளாவிய ரீதியில் அலட்சியம் செய்ய முடியாததாகிவிட்டது.

பொதுவான சனத்தொகை அதிகரிப்பு விகிதத்தைக் காட்டிலும் வயோதிபர்களின் அதிகரிப்பு வீதம் கூடுதலானதாகவிருக்கின்றது.

இது வாழ்வின் தரம் உயர்ந்திருக்கிறது என்ற வரவேற்கத்தக்க அம்சத்தை உணர்த்துகின்றது என்ற போதிலும் பொருளாதார ரீதியில் பாரிய சவால்களைத் தோற்றுவிக்கக்கூடியது என்றும் செயலாளர் நாயகம் கூறியிருக்கிறார்.

வயோதிபர்களின் எண்ணிக்கை பத்து வருடங்களில் நூறு கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


நன்றி.

Thursday, October 4, 2012

இனிப்பு பானங்களால் எடை அதிகரிக்கும்

 இனிப்பு சோடா மற்றும் பழ பானங்கள் என்பவை உடற்பருமன் என்ற நோயுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளன என்பதை அமெரிக்காவில் கடந்த வாரம் வெளியான மூன்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.


 

1970 களிலிருந்து இத்தகைய பானங்களின் நுகர்வு இரண்டு மடங்கை விடவும் அதிகரித்து வந்துள்ளது. மேலும், இதே காலத்தில் அமெரிக்கர்களில் வயது வந்தவர்களில் 30% மானோருக்கு உடற்பருமன் அதிகரித்துள்ளது. இவ்வாறு New England Journal of Medicine இனால் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்களாக 33000 இற்கு மேற்பட்ட அமெரிக்கர்களை உள்ளடக்கி முதலாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இத்தகைய இனிப்பான பானங்களை பருகுவது ஒருவரின் எடையை கட்டுப்படுத்தும் மரபணுக்களை பாதிக்கின்றது என கூறப்பட்டுள்ளது. இவ் ஆய்வில், உடல் எடையை பாதிக்கும் 32 வேறுபட்ட மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், இனிப்பு பானங்களின் நுகர்வு மற்றும் உடற்பயிற்சி முறைகள் என்பவற்றையும் அவர்கள் கவனத்தில் கொண்டனர்.
 
சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் கலோரி தொடர்பாக ஏனைய இரண்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. எடையை குறைப்பதில் மினெரல் தண்ணீர் மற்றும் மென்பானங்கள் ஆகியவை கொண்டுள்ள செல்வாக்கை அறியும் நோக்குடன் இவை நடாத்தப்பட்டன.

Boston இலுள்ள சிறுவர்களுக்கான மருத்துவமனையில், எடை கூடுதலாக உள்ள 224 இளம் பருவத்தினரிடம் முதலாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் அல்லது மென்பானங்களை நுகர்வதற்கு ஒரு வருடகாலம் இவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இவர்களில் சாதாரண பானங்களைக் குடித்தவர்களிடையே 0.68 Kg எடை அதிகரிப்பு ஏற்பட்ட அதேவேளை, இனிப்பான பானங்களை பருகியவர்களிடத்தில் 1.5 Kg அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.



நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் 4-11 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களை உள்ளடக்கி மற்றைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பாதியினர் இனிப்பான மற்றும் பழ பானங்களையும் மற்றைய பாதியினர் இனிப்பற்ற பானங்களையும் அருந்தினர்.

18 மாதங்களிற்குப் பின்னர், குறைந்த கலோரியுடைய பானங்களை பருகிய சிறுவர்களிடத்தில் சராசரியாக 6.39 Kg அதிகரித்திருந்ததுடன், இனிப்பான பானங்களை அருந்தியவர்களிடத்தில் 7.36 Kg அதிகரிப்பு காணப்பட்டிருந்தது.

இந்த மூன்று ஆய்வுகளும், இனிப்பு பானங்களின் நுகர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான வலுவான உத்வேகத்தை வழங்குவதாக மருத்துவர் Sonia Caprio கூறியுள்ளார்.




நன்றி.

Friday, June 29, 2012

சிங்களம் கற்போம் : எதிர்மறை வாக்கியங்கள்


சிங்கள மொழியில்
உச்சரிப்பு
தமிழ் மொழியில்



01).ඔහු මෙහි නොමැත
       ohū mehi nomæta
    அவன் இங்கே இல்லை

02).මෙම පොත මගේ නොවෙයි
       mema pota magē noveyi
    அது என் புத்தகம் இல்லை

03).ඇතුල්වන්න එපා
       ætūlvanna epā
    உள்ளே நுழையாதே

04).මම කතා නොකරමි
       mama katā nokarami
    நான் பேசாமல் இருக்கிறேன்

05).මම නොලියමි
       mama noliyami
    நான் எழுதாமல் இருக்கிறேன்

06).මම නොපදවමි
       mama nopadavami
    நான் ஓட்டாமல் இருக்கிறேன்

07).මම ආදරය නොකරමි
       mama ādaraya nokarami
    நான் காதலிக்காமல் இருக்கிறேன்

08).මම නොදෙමි
       mama nodemi
    நான் கொடுக்காமல் இருக்கிறேன்

09).මම සිනානොවෙමි
       mama sinānovemi
    நான் புன்சிரிக்காமல் இருக்கிறேன்
  
10).මම නොගනිමි
       mama noganimi
    நான் எடுக்காமல் இருக்கிறேன்

11).ඔහු කතා නොකරයි
       ohū katā nokarayi
    அவன் பேசாமல் இருக்கிறான்

12).මහු නොලියයි
       mahū noliyayi
    அவன் எழுதாமல் இருக்கிறான்

13).ඔහු නොපදවයි
       ohū nopadavayi
    அவன் ஓட்டாமல் இருக்கிறான்

14).ඔහු ආදරය නොකරයි
       ohū ādaraya nokarayi
    அவன் காதலிக்காமல் இருக்கிறான்

15).ඔහු නොදෙයි
       ohū nodeyi
    அவன் கொடுக்காமல் இருக்கிறான்

16).ඔහු සිනානොවෙයි  
       ohū sinānoveyi  
    அவன் புன்சிரிக்காமல் இருக்கிறான்

17).ඔහු නොගනියි
       ohū noganiyi
    அவன் எடுக்காமல் இருக்கிறான்

18).අපි කතා නොකරමු
       api katā nokaramū
    நாங்கள் பேசாமல் இருக்கிறோம்

19).අපි නොලියමු
       api noliyamū
    நாங்கள் எழுதாமல் இருக்கிறோம்

20).අපි නොපදවමු
       api nopadavamū
    நாங்கள் ஓட்டாமல் இருக்கிறோம்

21).අපි ආදරය නොකරමු
       api ādaraya nokaramū
    நாங்கள் காதலிக்காமல் இருக்கிறோம்

22).අපි නොදෙමු
       api nodemū
    நாங்கள் கொடுக்காமல் இருக்கிறோம்

23).අපි සිනා නොවෙමු
       api sinā novemū
    நாங்கள் புன்சிரிக்காமல் இருக்கிறோம்

24).අපි නොගනිමු
       api noganimū
    நாங்கள் எடுக்காமல் இருக்கிறோம்



நன்றி.

Monday, June 25, 2012

கடனட்டை மோசடிகள் எப்படி இடம்பெறுகின்றன?


உங்களது கடனட்டை திருடப்பட்டிருக்காது, ஆனால் உங்கள் கடனட்டையை இன்னொருவர் பயன்படுத்தி பணத்தை செலவுசெய்த அபாயத்தை நீங்கள் எதிர் கொண்டிருக்கலாம். இது எப்படி சாத்தியமாகும்?.

Card Cloning

கடனட்டை ஒன்று நகலெடுக்கப்பட்டு (Cloning) மோசடி செய்யப்படுவதனை இது குறிக்கின்றது. அநேகமாக, இதற்கு ஒரு கருவி பயன்படுத்தப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் Skimming என அழைக்கப்படுகின்றது. இம்முறையின் மூலம் திருடர்கள் கடனட்டையின் மின்னியல் தரவுகளை நகலெடுப்பது சாத்தியமாகின்றது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் திருடர்கள் உங்கள் கடனட்டையை ஒத்த ஒன்னொரு அட்டையை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.





பொதுவாக இந்த சாதனங்கள் பண இயந்திரங்களுடன் பொருத்தப்படுகின்றன. ஆனாலும் சில வேளைகளில் சில்லறை விற்பனையில் ஈடுபடும் திருடர்களும் மறைத்துப் பயன்படுத்துகின்றனர். பண இயந்திரத்தில் கடனட்டையை செலுத்தும் துளைக்கு மேலாக Skimming என்ற கருவி பொருத்தப்படுகின்றது. நீங்கள் அட்டையை உட்செலுத்தும்போது மிங்காந்தத் துண்டுகளிலிருந்து தகவல்கள் நகலெடுக்கப்படுகின்றன.

பெரும்பாலும் திருடர்கள் கடனட்டைகளின் ரகசியக் குறியீட்டை (PIN) பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். சில வேளைகளில் ஒரு சிறிய கெமராவினையும் பயன்படுத்த முனைகின்றனர். ATM களில் இந்த கெமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். ATM இனை பயன்படுத்த முன்னர், முற்றுமுழுதாக அதனை சோதனை செய்யுங்கள். அத்துடன் உங்களை யாராவது வேவு பார்க்கின்றார்களா? என்பதனையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

இவ்வகையான திருட்டுக்கள் மிகவும் கடினமானவையாகும். ஆகவே கைதேர்ந்த திருடர்களாலேயே இவை மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் வெளிப்படையாக எதனையும் செய்வதில்லை. நன்கு திட்டமிட்டு Skimming என்ற கருவியை ATM இனுள் பொருத்துகின்றனர்.

நீங்கள் இரகசிய இலக்கத்தை அழுத்தும் முன்னர், உங்களுக்குப் பின்னால் யாரும் இருக்கின்றார்களா? என்பதனை உறுதிப்படுத்திக்கொள்வதும் பாதுகாப்பாக இருப்பதற்கு இன்னொரு வழியாகும். அதேவேளை, போலிஸ் அல்லது வங்கி எனக்கூறும் எல்லோருக்கும் எடனே உங்கள் இரகசிய இலக்கத்தை வெளிப்படுத்த வேண்டாம்.

உங்கள் கடனட்டை ATM இனுள் மாட்டிக்கொண்டுவிட்டால் அவ்விடத்தில் நின்றபடியே உடனடியாக வங்கிக்கு அறிவியுங்கள். அத்துடன், அந்த நேரத்தில் உங்களுக்கு உதவ யாரும் முன்வந்தாலும் கூட எச்சரிக்கையாகவே இருங்கள்.       

கண்டிப்பாக, உங்களது கணக்கு அறிக்கைகளை சீறாக பரிசீலித்து வாருங்கள். உங்கள் கணக்கு அல்லது கடனட்டை தொடர்பாக ஏதாவது ஆபத்து இருக்கலாம் என்று எண்ணினால் உடனடியாக உரிய வங்கியை அல்லது வழங்குநரை தொடர்புகொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கணக்கை சரிபார்ப்பதுடன் புதிய கடனட்டை வேண்டுமென்றால் கூட அனுப்பிவைப்பார்கள். இந்த வகையான மோசடிகளால் பாதிக்கப்பட்ட பல அப்பாவிகள் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகின்றார்கள். அப்படி இருக்கக் கூடாது.



நன்றி.

Sunday, June 17, 2012

சிங்களச் சொற்களஞ்சியம். பகுதி - 2


சிங்களச்சொல் - உச்சரிப்பு - தமிழ்ச்சொல்


විවිධපද
vividha pada
பல்வேறு பொருட்கள்
ශිල්පය
śilpaya
கலை
බැංකුව
bæṁkūva
வங்கி
වෙරළ
veral̠a
கடற்கரை
පොත
pota
புத்தகம்
බයිසිකලයෙන්
bayisikalayen
சைக்கிளில்
බසයෙන්
basayen
பேருந்தியில்
මෝටර්රථයෙන්
mōṭar rathayen
காரில்
දුම්රියෙන්
dūmriyen
இரயிலில்
ආපනශාලාව
āpana śālāva
சிற்றுண்டிசாலை
රට
raṭa
நாடு
කාන්තාරය
kāntāraya
பாலைவனம்
ශබ්දකෝෂය
śabdakōṣaya
அகராதி
පොළව
pol̠ava
மண்
මල්
mal
பூக்கள்
පාපන්දුව
pāpandūva
கால்பந்து
කැලය
kælaya
காடு
ක්රීඩාව
krīḍāva
விளையாட்டு
වත්ත
vatta
தோட்டம்
භූගෝලවිද්යාව
bhūgōla vidyāva
பூகோளம்
ඉතිහාසය
itihāsaya
சரித்திரம்
නිවස
nivasa
வீடு
දිවයින
divayina
தீவு
වැව
væva
ஏரி
පුස්තකාලය
pūstakālaya
நூல் நிலயம்
ගණිතය
gaṇitaya
கணக்கு
හඳ
han̆d
சந்திரன்
කන්ද
kanda
மலை
චිත්රපටිය
citrapaṭiya
திரைப்படங்கள்
සංගීතය
saṁgītaya
பாட்டு
සාගරය
sāgaraya
சமுத்திரம்
කාර්යාලය
kāryālaya
காரியாலயம்
පයින්
payin
கால் நடையாக
ක්රීඩකයා
krīḍakayā
விளையாடுபவர்
ගඟ
gan̆ga
நதி
විද්යාව
vidyāva
விஞ்ஞானம்
මුහුද
mūhūda
கடல்
අහස
ahasa
வானம்
පාපන්දුක්රීඩාව
pāpandū krīḍāva
கால் பந்தாட்டம்
තරු
tarū
நட்சத்திரங்கள்
සුපිරිවෙළඳසැල
sūpiri vel̠an̆dsæla
சிறப்பங்காடி
නානතටාකය
nāna taṭākaya
நீச்சல்குளம்
රඟහල
ran̆gahala
ஆடலரங்கு
ගස
gasa
மரம்
කාලගුණය
kālagūṇaya
வானிலை
අහිතකරකාලගුණය
ahitakara kālagūṇaya
மோசமானவானிலை
වලාකුල්සහිත
valākūl sahita
மேகமூட்டமாக
සීතල
sītala
குளிர்ச்சி
සීතල
sītala
குளிர்ந்த
මීදුමෙන්වැසුණු
mīdūmen væsūṇū
மூடுபனிகவிந்த
උණුසුම්
uṇūsūm
சூடான
හිතකරකාලගුණය
hitakara kālagūṇaya
அருமையானவானிலை
වෑස්සෙන
vǣssena
பொழிகின்ற
වැස්ස
væssa
மழை
වැසිවලාව
væsivalāva
மழைபொழிதல்
හිම
hima
வெண்பனி
හිමවැටීම
hima væṭīma
வெண்பனிபொழிதல்
අයිස්
ayis
பனிக்கட்டி
ප්රබෝධමත්
prabōdhamat
சூரியஒளிநிறைந்த
සුළංසහිත
sūl̠aṁ sahita
காற்றோட்டமுள்ள
වසන්තඍතුව
vasanta r̥tūva
கோடைகாலம்
ගිම්හානඍතුව
gimhāna r̥tūva
வசந்தகாலம்
සරත්ඍතුව
sarat r̥tūva
இலைஉதிர்காலம்
ශිශිරඍතුව
śiśira r̥tūva
குளிர்காலம்
පුද්ගලයින්
pūdgalayin
மக்கள்
නැන්දා
nændā
அத்தை
ළදරුවා
l̠adarūvā
குழந்தை
සොහොයුරා
sohoyūrā
சகோதரன்
ඥාතිසොයුරා, ඥාතිසොයුරිය
āti soyūrā,
āti soyūriya
பெற்றோரின் சகோதரச கோதரியின் மகன் மகள்
දුව
dūva
மகள்
දන්තවෛද්යවරයා
danta vadyavarayā
பல்வைத்தியர்
වෛද්යවරයා
vadyavarayā
வைத்தியர்
තාත්තා
tāttā
தந்தை
සීයා
sīyā
தாத்தா
ආච්චී
āccī
பாட்டி
ස්වාමිපුරුෂයා
svāmi pūrūṣayā
கணவன்
අම්මා
ammā
தாய்
බෑණා
bǣṇā
உடன்பிறந்தார்மகன்
ලේලිය
lēliya
உடன்பிறந்தார்மகள்
හෙදිය
hediya
தாதி
පොලිස්නිලධාරියා
polis niladhāriyā
காவல்துறையாள்
තැපැල්කරු
tæpælkarū
தபால்காரர்
මහාචාර්ය
mahācārya
பேராசிரியர்
පුතා
pūtā
மகன்
ගුරුවරයා,
ගුරුවරිය
gūrūvarayā, gūrūvariya
ஆசிரியர்
මාමා
māmā
மாமா, சிற்றப்பா, பெரியப்பா
භාර්යාව
bhāryāva
மனைவி



நன்றி.
Pages (62)123456789 Next