Saturday, November 2, 2013

உலகின் வளமிக்க நாடுகளின் வரிசை - 2013

 உலகின் வளமிக்க நாடுகளில் நோர்வே முதலிடத்தை பிடித்துள்ளது.



உலக நாடுகளில் வளமிக்க நாடுகள் பட்டியலை பிரித்தானியாவை தளமாகக் கொண்ட லெகாடம் (Legatum) ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் இரண்டாமிடத்தில் சுவிட்சர்லாந்தும் 3ம் இடத்தில் கனடாவும் உள்ளன.

அத்துடன் பொருளாதார சரிவு காரணமாக அமெரிக்கா 11 ஆவது இடத்திலும் , பிரித்தானியா 16 ஆவது இடத்திலுள்ளமுள்ளன.

மேலும் 4-ம் இடத்தில் சுவீடன், 5ம் இடத்தில் நியூசிலாந்து, 6ம் இடத்தில் டென்மார்க் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா 106 ஆவது இடத்திலுள்ளதுடன் சீனா 51 ஆவது இடத்திலுமுள்ளன.






நன்றி.

Friday, November 1, 2013

Kepler-78b : பூமியை போன்ற கோள்

 பூமி­யி­லி­ருந்து 400 ஒளி­யாண்­டுகள் தொலை­வி­லுள்ள நட்­சத்­தி­ர­மொன்றை வலம் வரும் பூமி­யை­யொத்த திணி­வையும் அடர்த்­தி­யையும் கொண்ட கோளொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.




கெப்லர் 78பி (Kepler-78b) என அழைக்­கப்­படும் இந்தக் கோள் எமது பூமியைப் போன்று பாறை­க­ளையும் இரும்­பையும் கொண்­டுள்­ளது.



ஆனால், இந்தக் கோளுக்கும் அத­னது தாய் நட்­சத்­தி­ரத்­துக்­கு­மி­டை­யி­லான தூரம் பூமிக்கும் சூரி­ய­னுக்கும் இடை­யி­லான தூரத்­துடன் ஒப்­பி­டு­கையில் நூறில் ஒரு பங்­கா­கும்.




இதன் கார­ண­மாக உயிர்வாழ்க்­கைக்கு சிறிதும் சாத்­தி­ய­மற்ற வகையில் 2000 பாகை செல்­சி­ய­ஸுக்கும் 2800 பாகை செல்­சி­ய­ஸுக்கும் இடைப்­பட்ட அதி­கூ­டிய வெப்­ப­நிலை நில­வு­கி­றது.

‘கெப்லர்’ - 78பி தனது தாய் நட்சத்திரத்தை 12 மணித்தியாலத்திலும் குறைந்த நேர த்தில் சுற்றி வருகிறது.


நன்றி.

இந்த ஆண்டின் உலகின் அதிசக்தி வாய்ந்த மனி­தர்கள்

 இந்த ஆண்டின் உலகின் அதிசக்தி வாய்ந்த மனி­த­ராக ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் (Vladimir Putin) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெ­ரிக்க ‘போர்பஸ்’ (Forbes) சஞ்­சி­கையால் வெளி­யி­டப்­பட்ட மேற்­படி சக்திவாய்ந்த நபர்­க­ளுக்­கான வரு­டாந்தப் பட்டியலில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்­துக்குத் தள்­ளப்­ப­டு­வது கடந்த 3 வரு­டங்­களில் இதுவே முதல் தட­வை­யாகும்.




மேற்­படி பட்­டி­யலில் மூன்றாம் இடத்தை சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்கும், 4 ஆம் இடத்தை பாப்­ப­ரசர் பிரான்ஸிஸும் 5 ஆம் இடத்தை ஜேர்­ம­னிய அதிபர் அஞ்ஜெலா மெர்­கலும் 6 ஆம் இடத்தை மைக்ரோ சொப்ட்டின் தலைவர் பில் கேட்ஸும் பெற்­றுள்­ளனர்.




இந்தப் பட்­டி­ய­லி­லுள்ள முதல் 20 பேரில் இடம்பிடித்த இரு பெண்­களில் ஒரு­வ­ராக அஞ்ஜெலா மெர்­கல் விளங்கு­கிறார்.




மேலும், பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் இந்தப் பட்­டி­யலில் 11 ஆம் இடத்தில் உள்ளார்.

சிரி­யாவில் இடம்­பெற்று வரும் உள்­நாட்டு போர் தொடர்பில் அமெ­ரிக்­காவும் ரஷ்­யாவும் முரண்­பாட்டை எதிர்கொண்ட நிலையில் உலகின் அதி சக்தி வாய்ந்­த­வர்கள் பட்­டி­யலில் வெளி­யா­கி­யுள்­ளது.

கடந்த 12 வருட கால­மாக ரஷ்ய அர­சி­யலில் செல்­வாக்குச் செலுத்திவரும் புட்டின், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்­யாவின் ஜனா­தி­ப­தி­யாக மீளவும் தெரிவு செய்­யப்­பட்டார்.

வரவுசெல­வுத்­திட்ட மற்றும் கடன் பிரச்­சி­னையால் அமெ­ரிக்க அர­சாங்க நிறு­வ­னங்கள் 16 நாட்கள் மூடப்பட்டமை பராக் ஒபமாவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தமைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.



Forbes' 2013 list of powerful people:
 

 

 
 
 

நன்றி.

உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­து­வ­மனை

 உல­கி­லேயே அதிக சுறு­சு­றுப்­பான மகப்­பேற்று மருத்­து­வ­மனை என்ற பெயரை பிலிப்­பைன்ஸின் மணிலா நக­ரி­லுள்ள டாக்டர் ஜோஸ் பபெலா (Jose Fabella) ஞாப­கார்த்த மருத்­து­வ­மனை பெறு­கி­றது.



இந்த மருத்­து­வ­ம­னைக்கு தின­சரி 300 கர்ப்­பிணித் தாய்­மார்கள் வரு­கின்­றனர்.



மகப்­பேற்றுமருத்­து­வ­ம­னை­யி­லுள்ள ஒவ்­வொரு கட்­டி­லிலும் 5 தாய்­மார்கள் வரை உறங்கி வரு­வ­துடன் அந்த மருத்­து­வ­ம­னையில் தின­சரி 100 குழந்­தைகள் வரை பிறக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் அங்கு பிர­சவ அறையில் ஒரே சம­யத்தில் 6 பெண்கள் வரை அனுமதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

குப்­பை­களைக் கொட்டும் பகு­தி­யொன்றின் மீது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இந்த மருத்­து­வ­மனை மணிலா நக­ரி­லுள்ள டொன்டோ (Tondo) சேரிப் பகு­தியைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.




அந்த மருத்­து­வ­ம­னையின் தலைமை மருத்­து­விச்­சி­யான அன்னர் பிரேபஸ் (Anna Prebus) இதுவரை 200,000 குழந்தைகளின் பிரசவத்திற்கு உதவியுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சென்று பார்வையிடுங்கள்....

நன்றி.

Wednesday, July 24, 2013

இலங்கைக்கு வருகை தந்த சுற்­றுலாப் பய­ணி­கள்

இவ்­வ­ருடம் முதல் ஆறு மாதங்­களில் இலங்கை வருகை தந்த வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை 5 இலட்­சத்து 12 ஆயி­ரத்து 281 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது. கடந்த வருடம் முதல் ஆறு மாதங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இது 13.1 வீத வளர்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இலங்கை சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.




இவ்­வ­ரு­டத்தின் ஜூன் மாதத்தில் மட்டும் இலங்­கைக்கு 73,628 வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர்.

அத்­துடன் ஜூன் மாத முடி­வுடன் இலங்­கைக்கு இவ்­வ­ரு­டத்தில் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு ஐந்து இலட்­சத்து 12 ஆயி­ரத்து 281 பேர் வருகை தந்­துள்­ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலத்தில் இலங்­கைக்கு நான்கு இலட்­சத்து 52 ஆயி­ரத்து 867 சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­தி­ருந்­தனர். அந்த வகையில் இவ்­வ­ருடம் முதல் ஆறு மாத காலத்தில் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையில் 13.1 வீத அதி­க­ரிப்பு காணப்­ப­டு­கின்­றது.

வழ­மை­போன்று இம்­மு­றையும் இந்­தி­யா­வி­லி­ருந்தே அதி­க­ள­வான சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­துள்­ளனர். இந்­தி­யா­வி­லி­ருந்து 13856 சுற்­றுலாப் பய­ணிகள் வந்­துள்­ளனர். அதற்கு அடுத்­த­தாக பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து 6400 பேர் ஜூன் மாதத்தில் இலங்கை வந்­துள்­ளனர்.

மாலை­தீ­வி­லி­ருந்து ஜூன் மாதத்தில் 5454 சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­த­துடன் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து 3718 பேரும் ஜேர்­ம­னி­யிலி­ருந்து 3248 சுற்­றுலாப் பய­ணி­களும் வருகை தந்­துள்­ளனர்.

கன­டா­வி­லி­ருந்து 3112 சுற்­றுலாப் பய­ணி­களும் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து 3192 சுற்­றுலாப் பய­ணி­களும் இலங்கை வந்­துள்­ளனர். பிரான்­ஸி­லி­ருந்து 2545 சுற்­றுலாப் பய­ணி­களும் வருகை தந்­துள்­ளனர். சீனா­வி­லி­ருந்து 2765 சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­துள்­ளனர்.

இலங்கை சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­ய­க­மா­னது சர்­வ­தேச மட்­டத்தில் பல்­வேறு வகை­யி­லான மெகா ஊக்­கு­விப்பு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. இவ்­வ­ரு­டத்தில் இந்­தி­யாவின் பெங்­களூர் மற்றும் மும்பை ஆகிய பகு­தி­களில் மெகா பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்­தது.



நன்றி.

Wednesday, January 9, 2013

நீர்ப்பறவை : புதிய பார்வைவெளியில்.....

தற்காலத்தில், தமிழர் வாழ்வியலில் இருந்து அந்நியப்பட்ட கதைக்களமும் பாத்திரங்களின் ஆக்கிரமிப்பும் அந்நிய பண்பாட்டு மயமாக்கலும் தமிழ்ப் படங்களாக வந்து குவிகின்றன. 

தமிழ்ச் சூழலின் கேளிக்கை என்ற அளவைத் தாண்டி இன்னும் சினிமா புரிந்துகொள்ளப்படவில்லை. இன்றைய தீவிர சினிமாவின் இலக்கு வாழ்வைக் காட்சி நிலையில் அப்படியே பிரதிபலிப்பது மட்டுமல்ல, மாறாக வாழ்வின் முக்கிய பிரச்சினையாகக் கருதும் ஒன்றை நுணுகி ஆராய்வதும் அவதானித்து வெளிப்படுத்துவதும் முக்கியம். இந்தப் பண்புடன் கூடிய தமிழ்ப் படங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ள போதிலும், இவற்றைக் கண்டுகொள்ளக்கூடிய பார்வைவெளி இன்னமும் விரிவாக்கம் பெறவில்லை.

அந்த ரீதியில் தற்போது வெளிவந்துள்ள நீர்ப்பறவை எனும் படம் மீது நமது கவனத்தை குவிப்பது முக்கியம். இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளர். இவர் இதுவரை தமிழில் கூடல்நகர், தென்மேற்குப் பருவக்காற்று முதலான படங்களை இயக்கியுள்ளார்.




நீர்ப்பறவை என்ற படம், கடலோர கிறிஸ்தவ நிலம் ஒன்றில் மையங்கொண்டுள்ளது. துப்பாக்கி, இரத்தம் இல்லாமல் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை, வன்முறையை காதலோடு சமூக, மனித உறவுகள் சார்ந்தும் கனவுகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், வலிகள், இழப்புகள் யாவற்றையும் கூட்டுமையப்படுத்திய எதார்த்த கதைக்களமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்ப்பறவை கதை ஒரு மீனவ நிலத்தில் நிகழ்கிறது. கடலில் அகதியாய் வந்து பிள்ளைகளற்ற பெற்றோர் (சரண்யா, ஸ்ரீராம்) தத்தெடுத்து வளர்க்கும் செல்ல மகனாக அருளப்பசாமி (விஷ்ணு) கதாநாயகனாக கதைக்களமாக பரிணாமம் பெறுகிறான். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நந்திதாஸ் முதன்மைப் பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.




ஈழத்தின் கிளிநொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாக தப்பிச்செல்லும் குடும்பம் நடுக்கடலில் கடற்படையினரால் வள்ளத்துக்குள் வைத்து பெற்றோர்கள் சுடப்பட்டு கிடக்க சிறுவனொருவன் அழுதுகொண்டிருக்கிறான். இந்தக் காட்சியின் பின்னர் ஏற்படக்கூடிய வளர்ச்சிகளும் தர்க்கங்களும்தான் ரீர்ப்பறவை படத்தில் எங்கும் துப்பாக்கி சுடும் வன்முறைக் காட்சிகளையோ அல்லது இராணுவத்தின் அதிகார மமதையோ காட்சிப்படுத்தாமல் மனத்திரை எழுப்பும் உணர்வுகளில் சுழல் சிந்தனைப் படிவங்களின் காட்சிகளில் விரிவுக்கான தயார் நிலை உருவாக்கப்படுவது இப்பட இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.

ஒருநாள் கடலுக்குச் சென்ற அருளப்பசாமி இரண்டு நாட்களாகியும் கரை திரும்பவில்லை. குடும்பமே பதற்றத்தில் இருக்கும் அந்நேரத்தில் தந்தை தனது மகனைத் தேடி கடலுக்குச் செல்கின்றார். அங்கே படகில் துப்பாக்கி வேட்டுக்கு இரையாகி அருளப்பசாமி இறந்து கிடக்கின்றான். தந்தை அவனைத் தூக்கிக்கொண்டு கரை சேர்கிறார்.

இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்பதை பார்வையாளர்கள் ஊகிக்கும் வகையில் இது காட்சியாக்கப்பட்டுள்ளது.

எந்தப் புள்ளியில் கதை தொடங்கியதோ அதே புள்ளியில் கதை வேறு பரிமணம் எடுக்கிறது. கதை சொல்லலும் காட்சிப்படுத்தலும் கடல் நிலம் சார்ந்த வாழ்வியல் கூறுகளில் உயிர்ப்புத் தளமாக மையங்கொண்டிருப்பது இப்படத்தின் சிறப்பு எனலாம். 

வீட்டோடு இருந்த பையனை வீட்டிலே புதைத்து விடுவோம். பொலிஸுக்கு தெரிந்தால் நியாயங்கிடைக்குதோ, இல்லையோ உடம்பைக் குத்திக் கிழித்து போஸ்மாடம் பண்ணி நாசம் செய்து விடுவார்கள் என எஸ்தரும் பெற்றோரும் புலம்பி அழுகின்றனர். இந்தக் காட்சி ஒருகணம் பார்வையாளர்களை நிமிர வைக்கிறது. இந்தக் கதையை எஸ்தர் மூலம் சின்ன வயது சுனைனா பெரிய வயது நந்திதாஸ் மூலம் இயல்பாக சொல்லப்படுகிறது.

கதையின் உத்திக்கு ஏற்ப காட்சிப்படுத்தல்கள், பின்னணி இசை, படத்தொகுப்பு யாவும் மிகப் பொருந்தி உள்ளன. நடிகர்களின் தேர்வும் கதைக்களமும் ஒளிப்பதிவும் பாராட்டும் வகையிலேயே உள்ளன.


தினமும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதும் அவர்களை வலுக்கட்டாயமாக சிறையில் அடைப்பதும் நமக்கு செய்திகளாகத் தொடர்கின்றன. ஆனால், தமிழகக் கிராமப் பகுதிகளில் இது ஏற்படுத்தும் உணர்வலைகள், கொந்தளிப்புகள் யாவும் வெளிச்சத்திற்கு வருவதாக இல்லை. தமிழகம், ஈழம் சார்ந்து வெளிப்படக்கூடிய தமிழர் வாழ்வியலில் கண்டுணரும் நெருக்கடிகள், இழப்புகள் என்பன வாழ்வியலில் எவ்வாறு தெரிவிற்கான களங்களைத் திறந்துவிடுகின்றன என்பது பற்றிய தேடல் முக்கியம்.

நீர்ப்பறவை - நம் ஒவ்வொருவருக்குள்ளும் சுழல் பார்வைக்கான வாழ்வியலுக்கான ஒரு மாதிரிக் கூறாகவும் படைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பேசிய அரசியலும் சரி பேசாமல் விட்ட அரசியலும் சரி இந்திய - இலங்கை மைய நீரோட்ட அரசியலில் தாக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.




 படித்தவற்றில் பிடித்தது


 நன்றி.