இவ்வருடம் முதல் ஆறு மாதங்களில் இலங்கை வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்து 12 ஆயிரத்து 281 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த வருடம் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 13.1 வீத வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் மட்டும் இலங்கைக்கு 73,628 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் ஜூன் மாத முடிவுடன் இலங்கைக்கு இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு ஐந்து இலட்சத்து 12 ஆயிரத்து 281 பேர் வருகை தந்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலத்தில் இலங்கைக்கு நான்கு இலட்சத்து 52 ஆயிரத்து 867 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் இவ்வருடம் முதல் ஆறு மாத காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 13.1 வீத அதிகரிப்பு காணப்படுகின்றது.
வழமைபோன்று இம்முறையும் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 13856 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக பிரித்தானியாவிலிருந்து 6400 பேர் ஜூன் மாதத்தில் இலங்கை வந்துள்ளனர்.
மாலைதீவிலிருந்து ஜூன் மாதத்தில் 5454 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து 3718 பேரும் ஜேர்மனியிலிருந்து 3248 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
கனடாவிலிருந்து 3112 சுற்றுலாப் பயணிகளும் அமெரிக்காவிலிருந்து 3192 சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வந்துள்ளனர். பிரான்ஸிலிருந்து 2545 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து 2765 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமானது சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையிலான மெகா ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இவ்வருடத்தில் இந்தியாவின் பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் மெகா பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது.
நன்றி.
இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் மட்டும் இலங்கைக்கு 73,628 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன் ஜூன் மாத முடிவுடன் இலங்கைக்கு இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு ஐந்து இலட்சத்து 12 ஆயிரத்து 281 பேர் வருகை தந்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலத்தில் இலங்கைக்கு நான்கு இலட்சத்து 52 ஆயிரத்து 867 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் இவ்வருடம் முதல் ஆறு மாத காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 13.1 வீத அதிகரிப்பு காணப்படுகின்றது.
வழமைபோன்று இம்முறையும் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 13856 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக பிரித்தானியாவிலிருந்து 6400 பேர் ஜூன் மாதத்தில் இலங்கை வந்துள்ளனர்.
மாலைதீவிலிருந்து ஜூன் மாதத்தில் 5454 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து 3718 பேரும் ஜேர்மனியிலிருந்து 3248 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
கனடாவிலிருந்து 3112 சுற்றுலாப் பயணிகளும் அமெரிக்காவிலிருந்து 3192 சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வந்துள்ளனர். பிரான்ஸிலிருந்து 2545 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து 2765 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமானது சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையிலான மெகா ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இவ்வருடத்தில் இந்தியாவின் பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் மெகா பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது.
நன்றி.
No comments:
Post a Comment
கருத்துக்கள்